Skip to main content

TDH ASK TINKU 02 ENGLISH TRAINING THROUGH TAMIL EZHILARASAN TRANSLATION


ASK TINKU QUESTIONS

நண்பரே,

கீழே உள்ளதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து எனக்கு அனுப்பவும் ...... கட்டணம் உண்டு


ANSWERS-earth,sword
.



FRIENDS,

PLEASE TRY TO TRANSLATE THE BELOW MATTER INTO ENGLISH
AND SEND TO ME

For newcomers

CHARGES APPLY
CONDITIONS APPLY

Or

JUST KEEP WATCHING THIS PAGE
TO GET more of
MY TRANSLATION
EZHILARASAN VENKATACHALAM
=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥

டிங்குவிடம் கேளுங்கள்: 12 Jun 2018 

4) என் அம்மா வேலைக்குச் செல்வதால், வீட்டு வேலைகளில் தங்கையின் உதவியைக் கேட்பார். என் தங்கை என்னையும் வேலைகளைச் செய்யச் சொல்லிச் சண்டை போடுவாள். என் அப்பா வீட்டு வேலைகள் செய்ததில்லை. அதனால் நானும் செய்வதில்லை. இது தவறா, டிங்கு? நீ வீட்டு வேலைகள் செய்வாயா?

–வி. நகுலன், நாமக்கல்.

பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளை ஆண்கள் செய்ய வேண்டுமா என்றுதானே கேட்கிறீர்கள், நகுலன்? ஆண் வேலை, பெண் வேலை என்று தனித்தனியாக எதுவும் இல்லை. நம் எல்லோருக்குமே வயிறு இருக்கிறது, அது வேளாவேளைக்குப் பசிக்கவும் செய்கிறது. நமக்கான உணவை நாமே செய்து சாப்பிடுவதிலோ, அல்லது செய்து கொடுப்பவர்களுக்கு உதவுவதிலோ என்ன கஷ்டம்? உங்கள் வீட்டில் அம்மா வெளி வேலைக்கும் செல்கிறார், வீட்டிலும் வேலைகளைச் செய்கிறார். உங்கள் அப்பாவோ வெளி வேலையை மட்டும் செய்துவிட்டு, வீட்டில் சும்மா இருக்கிறார்.

இப்போது யாருக்கு அதிக வேலைப் பளு? உங்களைப் போலவே உங்கள் தங்கையும் பள்ளிக்குச் செல்கிறார். பாடம் படிக்கிறார். ஆனாலும் வீட்டில் அவர் மட்டும் வேலை செய்ய வேண்டும் என்கிறீர்கள். எந்த விதத்தில் உங்கள் அம்மாவும் தங்கையும் உங்கள் அப்பாவையும் உங்களையும்விடக் குறைந்துவிட்டனர்? ஏன் அவர்களுக்கு மட்டும் வேலைச் சுமை அதிகம் என்று யோசித்துப் பாருங்கள். வீட்டு வேலைகளை ஆணும் பெண்ணும் சேர்ந்து செய்வதுதான் நியாயம் என்று புரியும்.

எங்கள் வீட்டிலும் சரி, நான் யார் வீட்டுக்குப் போனாலும் சரி, வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ளத் தயங்க மாட்டேன். ஒருவர் வேலை செய்வதைப் பார்த்துக்கொண்டு, என்னால் சும்மா இருக்க முடியாது. வீடு பெருக்குவேன், பாத்திரம் தேய்ப்பேன், துணி சுவைப்பேன், சமையல் செய்வேன். நீங்களும் வீட்டு வேலைகளைச் செய்து பாருங்கள், உங்களுக்கே அதில் ஒரு மகிழ்ச்சி கிடைக்கும். உங்கள் அம்மாவும் தங்கையும் உங்களைக் கொண்டாடுவார்கள்.


5) தலைக்குக் குளித்த உடன் தூக்கம் வருகிறதே ஏன், டிங்கு?

-ப்ராங்க் ஜோயல், 5-ம் வகுப்பு,ஜெயின் வித்யாலயா, மதுரை.

தண்ணீர் தலையில் விழுந்தவுடன் ரத்தக் குழாய்கள் சற்று சுருங்குகின்றன. மூளைக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இதன் காரணமாக நமக்குத் தூக்கம் வருகிறது. இதேபோலதான் சாப்பிட்ட பிறகும் ரத்தக் குழாய்கள் சற்று சுருங்குகின்றன. மூளைக்குச் செல்லும் ரத்தமும் குறைகிறது. அதனால் தூக்கம் வருகிறது, ப்ராங்க் ஜோயல்.

6) எரிநட்சத்திரம் என்றால் என்ன, அதைப் பார்த்தால் ஞாபக மறதி வருமா, டிங்கு?

–வி. திவ்யதர்ஷினி, 4-ம் வகுப்பு, ஸ்ரீ செளடாம்பிகா நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

நமது சூரிய மண்டலத்தில் பல கோடிக்கணக்கான கற்களும் உலோகப் பாறைகளும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவை சில நேரம் பூமியின் காற்று மண்டலத்துக்குள் வேகமாக வரும்போது, உராய்வினால் எரிய ஆரம்பிக்கின்றன. இதைத்தான் எரிகல், எரிநட்சத்திரம், விண்வீழ்கல் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். எரி கல்லைக் கண்டால் மறதி ஏற்படும் என்று என் பாட்டிகூடச் சொல்லியிருக்கிறார். ஆனால் மறதிக்கும் எரிகல்லுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை, திவ்யதர்ஷினி.

7) என் வீட்டில் கிளி, நாய் போன்ற செல்லப் பிராணிகளை வளர்க்கிறோம். நீ ஏதாவது செல்லப் பிராணியை வளர்த்து வருகிறாயா, டிங்கு?

–எம். அபிஷேக், வாணியம்பாடி.

எனக்குச் செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் விருப்பமோ, ஆர்வமோ இல்லை, அபிஷேக். பறந்து திரியும் பறவைகளைக் கூண்டுக்குள் வைத்தால் சிறை வைத்ததுபோல் தோன்றும். அன்பு என்ற பெயரில் எந்தப் பிராணியையும் நமக்கு அடிமையாக வைத்துக்கொள்வதில் விருப்பமில்லை.

Source :

https://tamil.thehindu.com/society/kids/article24144386.ece

*** ((())) ***

நன்றி :

தி இந்து

டிங்குவிடம் கேளுங்கள்: 12 Jun 2018

THIS IS ONLY FOR
EDUCATIONAL PURPOSES

 
Collected by

Ezhilarasan Venkatachalam
TAMIL BASED ENGLISH TRAINER
Inventing new methods to Learn English
SALEM, SOUTH INDIA.



Comments

Popular posts from this blog

Moothurai translation song 11 to 20 Ezhilarasan

Song 11 to 20 moothurai Translation Ezhilarasan Venkatachalam Translation - மூதுரை - ஔவை - 11 to 20 . .[=]  Moothurai -- songs 1 to 10    [=] [=]   Moothurai -- songs 21 to 30  Song 11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்றம் கருமம் செயல். பொருள்:  நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே  ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. //  We only use the rice grains from the rice crop. However, if the grain is separated from the husk, then it does not grow any further. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை. //  Similarly, even if a person has done a great job with his exceptional talent, unless due help is rendered to him, it may not bear any fruit. Song 12. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும். பொருள்: தாழம்பூ...

Thirukkural 781 to 790 narration translation friendship by Venkatachalam Salem

Thirukkural simpler translation of narration by Ezhilarasan Venkatachalam .. . திருக்குறள்  / அறத்துப்பால் அதிகாரம் :  நட்பு / Thirukkural Chapter:  friendship Simpler translation of narration by Ezhilarasan Venkatachalam m.m.m.m.m.m அதிகாரம்/Chapter: நட்பு / Friendship குறள் 781: செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. Couplet Explanation: What things are there so difficult to acquire as friendship ? What guards are there so difficult to break through by the efforts (of one's foes) ? . Ezhilarasan Venkatachalam's simpler Explanation: Nothing is difficult to earn in life like a GOOD FRIENDSHIP. Once it has been acquired, then it becomes an unconquerable fortress for our entire life. குறள் 782: நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு. Couplet Explanation: The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon. Venkatachalam's simpler Explanation: The friendship of...

Sandwich Translation My work under Ex Boss KSM by EZHILARASAN Venkatachalam

My work under Ex Boss KSM Sandwich Translation KSM SIR, MY MENTOR -- TAMIL TRANSLATION  Part 1 ######## My mentor KSM or  Mr.K.SATHIYAMOORTHY is one of the positive minded people who had greatly influenced my life. /  நண்பரே, என் வழிகாட்டியான திரு.சத்தியமூர்த்தி  அல்லது KSM ஐயா என் வாழ்க்கையில் நேர் மறை சிந்தனைகளை விதைத்த மாமனிதர். இவர் என் வாழ்க்கையை இன்று நான் மகிழ்ச்சியாக வாழ வழி வகுத்தவர். I can say he was my mentor. /  நான் அவரை என் வழிகாட்டியாக  சொல்ல முடியும். I worked under him only for around 385 days or so. /  நான் அவருக்கு கீழே வேலை  செய்தது  சுமார் 385 நாட்கள் மட்டுமே.   OTHER WORKS OF EZHIL VENKATACHALAM   But the management experience that I gained from him was great. /  ஆனால் மேலாண்மை அனுபவம் என்று நான் அவரிடம் இருந்து பெற்றது மிகப்பெரிய அளவு. Perhaps, I can write a book on that subject. /  நான் அதைப்பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். No doubt he turned me into an useful person to my family and ...